இஸ்ரேலை சூறையாடும் ஈரான்...! தூதரகத்தை மூடி ஓடும் அமெரிக்கா
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் இன்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டிருக்கும் என இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி (Mike Huckabee) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கான (Israel) அமெரிக்க தூதர் வெளியிட்டுள்ள X பதிவிலேயே குறித்த விடத்தை தெரிவித்துள்ளார்.
டெல் அவிவ் இல் உள்ள தூதரக கிளைக்கு அருகே ஈரானிய ஏவுகணை தாக்குதல்களில் சில சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பணியாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Our @usembassyjlm US Embassy in Israel & Consulate will officially remain closed today as shelter in place still in effect. Some minor damage from concussions of Iranian missile hits near Embassy Branch in @TelAviv but no injuries to US personnel.
— Ambassador Mike Huckabee (@GovMikeHuckabee) June 16, 2025
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்
இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகள் தாக்குதலைத் தொடர்வதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானும், இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
நான் வர்த்தகத்தை பயன்படுத்தி இரண்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதலை முடிவுக்கு கொண்டு வந்தேன்.
விரைவில் அமைதி
அதேபோல், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும்.
இப்போது பல பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகள் நடக்கின்றன. நான் நிறைய செய்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
