பேச்சுக்கு இடமில்லை - போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: உச்சக்கட்ட ஆதங்கத்தில் ஈரான்
போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை ஈரான் (Iran) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் தொடர்ந்து இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் இவ்வாறான ஒரு அறிவிப்பை ஈரான் விடுத்துள்ளது.
இது தொடர்பில் மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் ஓமானிடம் ஈரான் கருத்து தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிக்கலான விடயம்
இந்தநிலையில், இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், போர்நிறுத்தம் எட்டப்படுவது சிக்கலான விடயம் என்றும் ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதல்
இருப்பினும், சில நேரங்களில் அவர்கள் அதை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் (Canada) ஜி7 உச்சிமாநாட்டிற்குச் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் கோரினாரா இல்லையா என்பது குறித்து ட்ரம்ப கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
