ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஒரு வார அவகாசம்
ஈரானுடனான போருக்கான மதிப்பீட்டில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதாக அமெரிக்க தாக்குதல் நகர்வுகளை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியாகியுள்ளது.
ஈரானில் ஆட்சி மாற்றம் விரைவில் நடைபெற வாய்ப்பு குறைவு. அதற்கு நிலப்படை இராணுவ தலையீடு அல்லது பெரிய அளவிலான உள்நாட்டு போராட்டங்கள் மீண்டும் எழுவது போன்ற சூழ்நிலை தேவைப்படும் என அமெரிக்க தரப்புக்கள் கூறியுள்ள நிலையில் இந்த விடயம் அடிகோடிடப்பட்டுள்ளது.
இதனை சில இஸ்ரேலிய ஊடகங்களும் விளக்கியுள்ளன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட, இஸ்ரேல் மற்றும் உலகளாவிய யூத சமூகங்கள் தொடர்பான செய்திகள்களும் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வாரம் அவகாசம்
அதில் குறிப்பாக, அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுத்து, போரை விரைவில் முடிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது எண்ணெய் விலை உயர்வு, உலக சந்தை அழுத்தம் போன்ற காரணங்களால் என்று தெரிகிறது.
எனினும் அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
அமெரிக்க நிர்வாகம் இந்த மோதல் எண்ணெய் விலைகள் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அதிகமாக கவலைப்படுகின்றது.
அதே சமயம், இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகள் முக்கிய முன்னேற்றங்களை பெற்றுள்ளதாகக் கூறுகிறது.
எண்ணெய் விலைகளில் தாக்கம்
இதற்கிடையில், நேற்று வெளியான அமெரிக்காவின் செய்தித்தாள் ஒன்றில்,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுடன் மோதலைத் தொடங்கிய போது அதன் விளைவுகள் குறித்து முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

இந்த மோதல் நேரடியாக எண்ணெய் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட பொருளாதார நிபுணர்கள், ட்ரம்ப் நிர்வாகம் இந்த மோதலின் விளைவுகளை குறைவாக மதிப்பிட்டதாக கூறியுள்ளனர்.
அதன் காரணமாக, அமெரிக்காவில் தேவையான அளவில் எண்ணெய் உற்பத்தி இருந்த போதிலும், இரண்டு வாரங்களுக்குள் பெட்ரோல் விலை ஒரு லீற்றருக்கு 60 சென்ட் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்த “செழிப்பு நிறைந்த பொற்காலம்”("Golden Age of Prosperity) என்ற பொருளாதார இலக்கு, உயர்ந்து வரும் பணவீக்கத்துடன் நேரடி முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலின் படி, சந்தைகளில் உருவான அச்சத்தை குறைக்கும் முயற்சியாக, அமெரிக்காவின் மூலோபாய பெட்ரோலிய கையிருப்பிலிருந்து 172 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வெளியிட ட்ரம்ப் உத்தரவிட்டார்
இதற்கு முன், எரிசக்தி செயலாளர் கிரிஸ் ரைட் அளித்த கருத்துக்கள் முதலீட்டாளர்களை நிம்மதிப்படுத்தத் தவறியதாகவும் குறித்த அறிக்கை குறிப்பிடுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |