ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் நிறுத்தம்…!
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓகஸ்ட் 17 அன்று காலாவதியாக உள்ள நிலையில், அதன் கீழ் 60 நாள் போர் நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்காவும் ஈரானும் "ஒப்புக்கொண்டுள்ளன" என பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் புதன்கிழமை சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்தன.
"காலக்கெடுவை நீடிப்பதற்கு இரு தரப்பினரும் மத்தியஸ்தர்களிடம் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ளனர்," என மத்தியஸ்த செயல்முறைக்கு நெருக்கமான ஓர் வட்டாரம் கூறியது.
போர் நிறுத்தத்தை நீடிக்க செய்தி பரிமாற்றம்
"இருப்பினும், போர் நிறுத்த நீடிப்புக் காலம் குறித்து முடிவு செய்ய இரு தரப்பினரும் செய்திகளைப் பரிமாறி வருகின்றனர்," என்றும் அந்த வட்டாரம் மேலும் கூறியது.

ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. பின்னர், ஜூன் 17 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இறுதி ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.
பல்வேறு காரணங்களால் தடைப்பட்ட பேச்சு
இருப்பினும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்திற்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் பின்னர் தடைப்பட்டன.

ஜூலை 8 முதல் ஜூலை 24 வரை, அமெரிக்காவும் ஈரானும் இராணுவத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டன. இதில், வோஷிங்டன் ஈரானுக்குள் உள்ள இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது.
இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட பல அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் உபகரணங்கள் எனத் தான் கருதியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |