ஈரானுக்கு ஏற்படப்போகும் மற்றுமொரு நெருக்கடி : தயாராகும் அமெரிக்க இராணுவம்
வரும் நாட்களில், "ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்களில் ஏறிச் சோதனையிடவும், சர்வதேச கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்களைக் கைப்பற்றவும்" அமெரிக்க இராணுவம் தயாராகி வருவதாக, அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேனல் சனிக்கிழமை செய்தி வெளியிட்டது.
ஜேனலின்படி, இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டிற்கு வரத் தவறினால், ஈரானுக்கு உதவும் உலகெங்கிலும் உள்ள கப்பல்களை அமெரிக்க இராணுவம் பின்தொடரும்.
அதிகரிக்கப்படவுள்ள பொருளாதார அழுத்தம்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் மையமாக இருந்து வரும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் சலுகைகளை வழங்கவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் கட்டாயப்படுத்தும் நோக்கிலேயே வோஷிங்டன் பொருளாதார அழுத்தத்தை அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறியது.

image credit -firstpost
வெள்ளிக்கிழமை, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் ஜலசந்தி "முற்றிலும் திறக்கப்பட்டுள்ளது" என்று அறிவித்திருந்தார்.
இருப்பினும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான முற்றுகையைக் காரணம் காட்டி, அந்த நீர்வழிப்பாதை ஈரானின் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் அதன் "முந்தைய நிலைக்கு" திரும்பியுள்ளது என்று சனிக்கிழமையன்று ஐ.ஆர்.ஜி.சி கூட்டுத் தலைமையக அறிக்கை தெரிவித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |