வாகன சாரதிகளை குளிரவைத்த சாக்கு படல்கள்: நல்லூரில் நடந்த செயல்
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக வீதி சமிக்ஞை விளக்குகளில் (Traffic Lights) காத்திருக்கும் வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு வீதிகளில் காத்திருப்பவர்களுக்கு நிழல் தரும் வகையில் சாக்குப் படல்களைக் கட்டும் ஒரு வினோதமான மற்றும் பயனுள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனின் நேரடி முன்னெடுப்பில் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வீதி சமிக்ஞை விளக்குப் பகுதிகளில் இத்தகைய சாக்குப் படல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருவதால் சமிக்ஞை விளக்குகளில் சிவப்பு விளக்கு எரியும் போது திறந்த நிலையில் வெயிலில் காத்திருக்கும் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாக்குப் படல்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |