உக்ரைன் படைகளுக்கு உத்வேகத்தை அளிக்கவுள்ள அமெரிக்க ஏவுகணை
2 ஏவுகணை அமைப்புகள்
அமெரிக்கா உக்ரைனுக்கு மேற்பரப்பில் இருந்து தாக்கக்கூடிய 2 ஏவுகணை அமைப்புகளை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உக்ரைனுக்கான அதன் சமீபத்திய ஆயுதப் பொதிகளின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு இரண்டு NASAMS ஏவுகணை அமைப்புகள், நான்கு கூடுதல் எதிர்ப்பு பீரங்கி ராடர்கள் மற்றும் 150,000 தோட்டாக்கள் 155 மிமீ பீரங்கி வெடிமருந்துகளை அனுப்புகிறது என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
820 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவிப் பொதி
வியாழன் அன்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த நேட்டோ தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் கவனம் செலுத்த தீர்மானித்த அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன், உக்ரைனுக்கு சுமார் 820 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவிப் பொதியை வழங்குவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, வெள்ளியன்று கூடுதல் விவரங்களை வழங்கிய பென்டகன், பைடனின் அறிவிப்பை முறைப்படுத்தியது. மேலும், உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவியில் ஹை மொபிலிட்டி பீரங்கி ரொக்கெட் அமைப்புகளுக்கான (HIMARS) கூடுதல் வெடிமருந்துகளும் அடங்கும் என்று கூறியது.
அமெரிக்காவின் இந்த கூடுதல் உதவிகள், ரஷ்ய பீரங்கிகளின் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைனை வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.