ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம் விதிக்க திட்டமிடும் அமெரிக்கா!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரானுக்குப் பதிலாக அமெரிக்காதான் சுங்கக் கட்டணம் விதிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்து போர் மீதான அச்சத்தை தூண்டியுள்ளது.
அமெரிக்காவில் ஊடகங்களிடம் பேசிய அவர், “நாம் சுங்கக் கட்டணம் வசூலித்தால் என்ன? அவர்கள் அதை வசூலிப்பதை விட, நான் அதைச் செய்வதையே விரும்புவேன்.” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
முன்னதாக அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்ல விரும்பும் எண்ணெய்க் கப்பல்களுக்குப் புதிய சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஈரான் அதன் மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டியுள்ளது.
கப்பல்களுக்கு சுங்க கட்டணம்
அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கம் விதிப்பதற்கும், ஈரானின் இறையாண்மைப் பங்கை நிலைநாட்டுவதற்கும் ஆன ஒரு திட்டத்திற்கு அந்நாடு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் தற்போதைய மோதலில் அமெரிக்கா பெற்ற இராணுவ வெற்றியின் காரணமாக, அது சுங்க வரிகளை விதிக்க வேண்டும் என்று தாம் நம்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |