அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு: அதிர்ச்சியில் நேபாளர்கள்
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து நேபாளத்திற்கு (Nepal) வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா (United States) ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (டிபிஎஸ்) என்பது, போா் அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற நெருக்கடிகளை எதிா்கொள்ளும் சில நாடுகளைச் சோ்ந்த மக்களுக்கு அமெரிக்க அரசால் வழங்கப்படும் ஒரு சிறப்பு அனுமதியாகும்.
வீடு திரும்புவது அவா்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதன் அடிப்படையில், அவா்கள் அமெரிக்காவில் சட்டபூா்வமாக 18 மாதங்கள் தங்கி வேலை செய்ய இந்த டிபிஎஸ் அனுமதிக்கின்றது.
பாதுகாப்புத் துறை
இந்தநிலையில், நேபாளத்துக்கு வழங்கப்பட்ட இந்த அந்தஸ்தை கடந்த 2016 ஆம் ஆண்டு கூடுதலாக 18 மாத காலத்திற்கும், அதன் பிறகு பல முறையும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டிஎச்எஸ்) நீடித்தது.
இது தொடர்பில் தற்போது டிஎச்எஸ் வெளியிட்ட அறிக்கையில், “நேபாளத்தின் நிலைமை தற்போது சீராக உள்ளது.
நேபாள மக்கள்
எனவே, அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட டிபிஎஸ் அந்தஸ்தை 2025, ஜூன் 24 ஆம் திகதியுடன் ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
டிபிஎஸ் விதிகளின் கீழ், அமெரிக்காவில் உள்ள நேபாள மக்கள் ஒகஸ்ட் ஐந்தாம் திகதிக்குள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப கெடு விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
