இந்தியாவுடன் எந்தவிதமான போரையும் நடத்த விரும்பவில்லை - பாகிஸ்தான் பிரதமர்
"இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளோம்" என்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர்.
இந்தியாவுடன் எந்தவிதமான போரையும் நடத்த விரும்பவில்லை என்றும், நிலுவையில் உள்ள அனைத்து தீவிரமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருபதாகவும் பாகிஸ்தானின் பிரதமர் ஷெரிஃப் இதன் போது பதிலளித்திருந்தார்.
பாகிஸ்தானிலுள்ள அணு சக்தி, தற்காப்பு நோக்கத்திற்காக மாத்திரமே உள்ளது. அது ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்காக அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நமது தீவிரமான பிரச்சனைகளை அண்டை நாடுகள் புரிந்து கொள்ளாவிட்டால் அண்டை நாடுகளுடன் நட்பாக இருக்க முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்வது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்
கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தானால் நிகழ்த்தப்பட்ட மூன்று போர்களாலும், உயிரிழப்புக்கள், பொருளாதார இழப்பு மற்றும் வளங்கள் பற்றாக்குறையே ஏற்பட்டுள்ளது, இனியும் இவ்வாறான இழப்புகளை விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமல்லாமல் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், சிறந்த நட்புறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறி முடித்தார்.
இவற்றுக்கிடையே, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுவதுமாக கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.