இலங்கையிலிருந்து வெளியேறிய அமெரிக்கப் படையினர்
டித்வா புயலை அடுத்து அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக இலங்கை வந்த அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த (INDOPACOM) படையினர் தங்கள் மனிதாபிமான உதவிப் பணியை முடித்துக் கொண்டு றே்று(14) புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
60 அமெரிக்கப் படையினரும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து அமெரிக்க விமானப்படையின் C 130 விமானத்தில் புறப்பட்டனர்.
சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து பணி
கடந்த 7ஆம் திகதி இலங்கை வந்த அவர்கள் , பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதிலும் வழங்குவதிலும் உதவும் வகையில், சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து பணியாற்றியிருந்தனர்.

அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மற்றும் இரத்மலானை விமானப்படைத் தளம் ஆகியவற்றில் இருந்து, யாழ்ப்பாணம், அனுராதபுரம், திருகோணமலை, அம்பாறை, மத்தல உள்ளிட்ட விமானப்படைத் தளங்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு செல்வதில் ஈடுபட்டிருந்தன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 9 மணி நேரம் முன்