மாயாமான 2.5 மில்லியனில் வெறும் 200 டொலர்கள் மட்டுமே மீட்பு! பெரும் ஏமாற்றத்தில் அரசாங்கம்
நிதி அமைச்சகத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட இணையவழிப் பாதுகாப்பு மீறலைத் தொடர்ந்து, ஹெக்கர்களுக்கு சென்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தில் இருந்து, இலங்கை அதிகாரிகள் 200 அமெரிக்க டொலரை மட்டுமே மீட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திறைசேரியிலிருந்து வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போன நிதியைக் கண்டறிய, இலங்கை அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் உதவி கோரியிருந்தனர்.
இந்தத் தொகையின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலாவேரில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிலும், மற்றொரு பகுதி வேறொரு மாநிலத்தில் உள்ள வங்கியிலும் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எஞ்சியிருந்த 200 அமெரிக்க டொலர்
இருப்பினும், டெலாவேர் கணக்கு முற்றிலும் காலியாக இருந்ததாகவும், இரண்டாவது கணக்கில் வெறும் 200 அமெரிக்க டொலர் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும் அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மீட்கப்பட்ட மேற்படி சிறிய தொகை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |