கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி!
Sri Lanka
Parliament
Tamil National Alliance
By Vasanth
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

