தடுப்பூசி செலுத்தாதவர்கள் நகருக்குள் பிரவேசிக்கத் தடை - பொலிஸார் அதிரடி
srilanka
covid19
vaccine
corona
police
By S P Thas
ஒரு மருந்தளவு தடுப்பூசியேனும் செலுத்தாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பண்டாரவளை நகருக்குள் பிரவேசிக்க நேற்று (15) தடை விதிக்கப்பட்டிருந்தது.
பொலிஸ் சோதனை சாவடியில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டையை வைத்திருக்கும் நபர்களுக்கு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியிலும், அத்தியாவசிய கடமைகளை செய்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, அட்டை இல்லாத நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,