கண்டியில் சர்ச்சையை கிளப்பிய “ஒப்புதல் படிவம்” - சுகாதார அமைச்சகம் கொடுத்துள்ள பதில்
கண்டி - குண்டசாலை பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் போது வழங்கப்பட்ட வித்தியாசமான படிவம் தொடர்பில் சுகாதார அமைச்சகத்தால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி செலுத்தும் மையத்தில், நபரொருவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதமொன்றை அதிகாரிகளுக்கு கையளித்துள்ளதுடன், இதில் “ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது சொட்டு மருந்தை மாத்திரம் செலுத்திக்கொள்ள நான் விருப்பம்” என அந்த கடிதத்தில் எழுதியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவ்வாறான அறிவுரைகள் சுகாதார அமைச்சகத்தினால் யாருக்கும் வழங்கப்படவில்லை என்று சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவம் குறித்து இதுவரை எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்த சம்பவத்தின் காரணம் தொடர்பில் விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த படிவங்கள் தடுப்பூசியைப் பெற தடுப்பூசி மையத்திற்கு வந்த மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன, மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் தனி அளவு போதுமான பாதுகாப்பை அளிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், "ஸ்பட்னிக்-வி தடுப்பூசிகள், இரண்டு அளவுகளையும் கொண்டிருக்க வேண்டும்" என்று GMOA ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் சமந்த ஆனந்தா கூறினார்.
ஒப்புதல் படிவம் என்று அழைக்கப்படும் படம் தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது.