கட்சி உறுப்பினர்களை அழைக்காமல் கூட்டம் நடத்திய சுமந்திரன் : வெடித்த சர்ச்சை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை கூட்டம் நடைபெற்ற போது பெரும்பாலான வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்களுக்கு கூட்டத்துக்கு அறிவித்தல் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்ற நிலையில் சுமந்திரனுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கே கூட்டத்துக்கு அறிவிக்கப்பட்டதாகவும், உப செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருக்கு அறிவிக்கவில்லை எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தின் போது வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் தலைவர், செயலாளர் மற்றும் உபதலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் தெரிவு செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
யாப்பிற்கும் முரணானது
இந்தநிலையில், குறித்த கூட்டம் நடைபெறுவதை அறிந்த சில வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்கள் தாங்களாகவே கூட்டத்துக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் அவரது விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கு எதிராக காரசாரமான கருத்துகளை முன்வைத்ததுடன் சுமந்திரனை ஒருமையிலும் விழித்து தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.
நிலைமையை சமாளிக்க பெரும்பாடு பட்ட சுமந்திரன் நன்றி உரையும் கூறாமல் கூட்டத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
தமக்கு சார்பானவர்களை நிர்வாகத்துக்குள் உள்ளீர்த்து, வழக்கு முடிவடைந்த பின்னர் கட்சியின் மத்திய குழு நிர்வாக தெரிவு கூட்டம் நடைபெறும்போது தான் தலைவராக வருவதற்கான நரித் தந்திரோபாயமே இது என்றும், வழக்கு நிலுவையில் இருக்கும்போது தொகுதிக் கிளை உறுப்பினர்களை தெரிவு செய்வது சட்டத்திற்கும் யாப்பிற்கும் முரணானது என உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்