"அறிவைப் பயன்படுத்தி செயற்படுங்கள்" ரணிலுக்கு அறிவுரை வழங்கிய எம்.பி
எதிர்வரும் அதிபர் தேர்தல் விவகாரத்தில் அறிவைப் பயன்படுத்தி செயற்படுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கோரிக்கை
மேலும், “பொறாமைப்படுவதை விட்டுவிட்டு தனது அறிவைப் பயன்படுத்தி செயற்படுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டார்.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று 75 வருடங்களாக இலங்கையர்கள் அநீதி இழைக்கப்பட்ட ஒரு தேசம் என்று தெரிவித்த அவர் அந்த தவறை இப்போது திருத்திக் கொள்ள வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்”