வெடுக்குநாறி காட்டுமிராண்டித்தனம்: முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் கடும் கண்டனம்

Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lankan Peoples Manivannan
By Dilakshan Mar 10, 2024 09:30 PM GMT
Report

வெடுக்குநாறிமலையில் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினருக்கு எதிராக முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தமனான செயலினை கண்டித்து பொது அமைப்புக்களினால் இன்று(11) ஒழுங்குபடுத்தப்பட்டிக்கும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக்கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்ற திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள்.

அதிபர் ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

அதிபர் ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

கோர தாண்டவம்

அவ்வாறே தமிழர்களின் மிகத் தொன்மையான வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திலும் சிவபக்தர்கள் ஒன்று கூடி சிவபெருமானுக்கு ஆராதனைகளைச் செய்தார்கள்.

வெடுக்குநாறி காட்டுமிராண்டித்தனம்: முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் கடும் கண்டனம் | Vedukunarimalai Issue Manivannan Condemned

அந்த நேரத்தில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த சிவபக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டயமாக வெளியேற்றியதோடு ஆதிசிவனக்கு படையல் செய்வதற்காக கொண்டு வந்த பொருட்களையும் தூக்கி வீசியமை மிலேச்சத்தமான காட்டு மிராண்டித்தனமான செயலாகும்.

ஆரம்பத்தில் வீதித்தடைகளையிட்டு ஆதிசிவன் ஆலயத்திற்கு பக்த்தர்கள் செல்வதைத் தடுத்தும் பின்னர் கால்நடையாக நடந்து செல்லுமாறு அனுமதித்து அங்கு சென்றவர்கள் குடிப்பதற்கு குடிநீரை தடை செய்து வன்கொடுமை புரிந்தனர்.

காவல்துறையினர் இட்ட இத் தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி ஆதி சிவன் மீது கொண்ட பக்தியால் ஆதிசிவன் ஆலயத்தில் இரவு நேரத்தில் சிவபூஜையில் ஈடுபட்ட சிவபக்தவர்கள் மீது காவல்துறையினர் தமது கோரத் தாண்டவத்தினை நிகழ்த்தினர்.

எதிர்ப்பு போராட்டம்

பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று எந்த பாரபட்சமும் பார்க்காமல் தூக்கியெறியப்பட்டார்கள்.

வெடுக்குநாறி காட்டுமிராண்டித்தனம்: முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் கடும் கண்டனம் | Vedukunarimalai Issue Manivannan Condemned

உலக மகளிர் தினத்தில் சிவபூஜையில் ஈடுபட்ட மகளிர் மீதும் காவல்துறையினரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவர்களின் ஆடைகளினை கிழித்து அவமதித்தனர்.

தமிழர்களின் மிகத் தொன்மையான ஆதிசிவன் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்கள் செல்லுகின்ற போது அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து பாதுகாப்பு வழங்குகின்ற காவல்துறையினர் தமிழர்கள் சிவபெருமானின் முக்கிய விரதநாளாகிய சிவராத்திரியில் கூட அடக்குமுறைகளைப் பயன்படுத்தி பூஜைவழிபாடுகளை தடைசெய்கின்றார்கள் என்றால் இது தமிழர்கள் மீதான அப்பட்டமான திட்டமிடப்பட்ட கலாசாரப் பண்பாட்டு இன அழிப்பாகும்.

இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கெதிராகவும் மரபுசார் வழிபாட்டுரிமைக்காகவும் தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டியது இன்றைய காலத்தின் நியதியாகும்.

அவ்வகையில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தமனான செயலினைக் கண்டிப்பதோடு அச் செயலினை கண்டித்து பொது அமைப்புக்களினால் இன்று ஒழுங்குபடுத்தப்பட்டிக்கும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளுகின்றேன்” என தெரிவித்துள்ளார். 

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான முக்கிய தகவல்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான முக்கிய தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024