வெடுக்குநாறி காட்டுமிராண்டித்தனம்: முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் கடும் கண்டனம்

Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lankan Peoples Manivannan
By Dilakshan Mar 10, 2024 09:30 PM GMT
Report

வெடுக்குநாறிமலையில் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினருக்கு எதிராக முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தமனான செயலினை கண்டித்து பொது அமைப்புக்களினால் இன்று(11) ஒழுங்குபடுத்தப்பட்டிக்கும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக்கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்ற திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள்.

அதிபர் ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

அதிபர் ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

கோர தாண்டவம்

அவ்வாறே தமிழர்களின் மிகத் தொன்மையான வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திலும் சிவபக்தர்கள் ஒன்று கூடி சிவபெருமானுக்கு ஆராதனைகளைச் செய்தார்கள்.

வெடுக்குநாறி காட்டுமிராண்டித்தனம்: முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் கடும் கண்டனம் | Vedukunarimalai Issue Manivannan Condemned

அந்த நேரத்தில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த சிவபக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டயமாக வெளியேற்றியதோடு ஆதிசிவனக்கு படையல் செய்வதற்காக கொண்டு வந்த பொருட்களையும் தூக்கி வீசியமை மிலேச்சத்தமான காட்டு மிராண்டித்தனமான செயலாகும்.

ஆரம்பத்தில் வீதித்தடைகளையிட்டு ஆதிசிவன் ஆலயத்திற்கு பக்த்தர்கள் செல்வதைத் தடுத்தும் பின்னர் கால்நடையாக நடந்து செல்லுமாறு அனுமதித்து அங்கு சென்றவர்கள் குடிப்பதற்கு குடிநீரை தடை செய்து வன்கொடுமை புரிந்தனர்.

காவல்துறையினர் இட்ட இத் தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி ஆதி சிவன் மீது கொண்ட பக்தியால் ஆதிசிவன் ஆலயத்தில் இரவு நேரத்தில் சிவபூஜையில் ஈடுபட்ட சிவபக்தவர்கள் மீது காவல்துறையினர் தமது கோரத் தாண்டவத்தினை நிகழ்த்தினர்.

எதிர்ப்பு போராட்டம்

பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று எந்த பாரபட்சமும் பார்க்காமல் தூக்கியெறியப்பட்டார்கள்.

வெடுக்குநாறி காட்டுமிராண்டித்தனம்: முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் கடும் கண்டனம் | Vedukunarimalai Issue Manivannan Condemned

உலக மகளிர் தினத்தில் சிவபூஜையில் ஈடுபட்ட மகளிர் மீதும் காவல்துறையினரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவர்களின் ஆடைகளினை கிழித்து அவமதித்தனர்.

தமிழர்களின் மிகத் தொன்மையான ஆதிசிவன் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்கள் செல்லுகின்ற போது அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து பாதுகாப்பு வழங்குகின்ற காவல்துறையினர் தமிழர்கள் சிவபெருமானின் முக்கிய விரதநாளாகிய சிவராத்திரியில் கூட அடக்குமுறைகளைப் பயன்படுத்தி பூஜைவழிபாடுகளை தடைசெய்கின்றார்கள் என்றால் இது தமிழர்கள் மீதான அப்பட்டமான திட்டமிடப்பட்ட கலாசாரப் பண்பாட்டு இன அழிப்பாகும்.

இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கெதிராகவும் மரபுசார் வழிபாட்டுரிமைக்காகவும் தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டியது இன்றைய காலத்தின் நியதியாகும்.

அவ்வகையில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தமனான செயலினைக் கண்டிப்பதோடு அச் செயலினை கண்டித்து பொது அமைப்புக்களினால் இன்று ஒழுங்குபடுத்தப்பட்டிக்கும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளுகின்றேன்” என தெரிவித்துள்ளார். 

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான முக்கிய தகவல்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான முக்கிய தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024