யாழில் இருந்து சென்ற வாகனம் கிளிநொச்சியில் பாலத்துடன் மோதி விபத்து!
Sri Lanka Police
Jaffna
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Sathangani
கிளிநொச்சியில் கெப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பரந்தன் வீதியூடாக முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது வெளிகண்டல் பகுதியில் இன்று (11) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற கெப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்தில் வாகனத்தின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்