வாகன விலையில் ஏற்படப் போகும் மாற்றம்
sri lanka
price
vehicle
By Vanan
வாகனங்களின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று கருத்து வெளியிட்ட அவர், நாளொன்றுக்கு 15 வகை வாகனங்களின் விலை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது. நிதித் தளம்பல் அச்ச நிலை காரணமாகவே சிலர் வாகனங்களை முதலீடு செய்ய விரும்புகின்றர்.
இருப்பினும் நாட்டின் தற்போதைய நிலைமை இயல்பு நிலையை அடையும் போது கொள்வனவாளர்கள் பெரும் தொகை நிதியினை இழக்க நேரிடும்.
அத்துடன், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக இந்திக சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.