கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துறைமுகம் வாயிலாக தப்பிக்கும் சிலர்: முக்கிய புள்ளிகளா என சந்தேகம்
கப்பல் வாயிலாக தப்பியோடிய சிலர்
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தை நோக்கி சில அதிசொகுசு வாகனங்கள் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், அங்கு இரண்டு கப்பல்களின் மூலம் அங்கிருந்து சிலர் வெளியேறியுள்ளதாகவும், கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி அதிசொகுசு வாகனங்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி அதிசொகுசு வாகனங்கள் சில விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொழும்பின் நிலை தீவிரமடைந்துள்ளது.

விமான நிலையம் நோக்கி விரைந்த கார்கள் அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகங்களுக்குள் பொதுமக்கள் உள்நுழைந்துள்ளனர்.
இந்த நிலையில் போராட்டங்கள் ஆரம்பித்து ஒரு சில மணி நேரத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி அதிசொகுசு வாகனங்கள் சென்றுள்ளன.
எனினும், அதில் சென்றவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

