சீனப் பெண் அதிரடி கைது: இலங்கையில் செய்து வந்த காரியம்!
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
China
By Dilakshan
நிதி மோசடி தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவு 54 வயது சீனப் பெண்ணைக் கைது செய்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா வழங்குவதாகக் கூறி அந்தப் பெண் ரூ. 1.5 மில்லியனையும், அமெரிக்க டொலர்களை வழங்குவதாகக் கூறி ரூ. 1.916 மில்லியனையும் மோசடி செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில், சந்தேகநபரான பெண் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் பின்னர், கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி