சொகுசு ஹோட்டலாக மாறும் அரச தலைவர்களின் இல்லம்.
சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் டி.எம்.ஜயரத்ன போன்ற பல அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்ட "விசும்பய" இல்லத்தை சொகுசு ஹோட்டலாக மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) திட்டமிட்டுள்ளது.
1835ம் ஆண்டு காலனித்துவ ஆட்சிக்காலத்தின் போது கொழும்பிலுள்ள யூனியன் பிளேசில் "விசும்பய" என்ற கட்டடமானது கட்டப்பட்டது.
இக்கட்டடமானது, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், வரலாற்று பெறுமதி கொண்ட காணிகள் மற்றும் கட்டடங்களை குத்தகைக்கு விடும் திட்டத்தின் கீழ் அரச தனியார் பங்காளித்துவத்தின் கீழ் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அதுமாத்திரமல்லாமல், முன்னாள் தலைவர்களான சிறிமாவோ பண்டாரநாயக்க, டி.எம். ஜயரத்ன, அனுருத்த ரத்வத்த, லக்ஷ்மன் கதிர்காமர், மங்கள சமரவீர மற்றும் பேராசிரியர். ஜி.எல். பீரிஸ் ஆகியோர் தமது உத்தியோகபூர்வ இல்லமாக "விசும்பய" வை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) திட்டமிடலின் படி, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அசொடெல் ஹோசஸ்பிடாலிட்டி லிமிடெட் (Azotels Hospitality Limited) இற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டது.
குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் "விசும்பய" கட்டடம் 50 வருடங்களிற்கு குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அசொடெல் ஹோசஸ்பிடாலிட்டி லிமிடெட் (Azotels Hospitality ltd) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, அசொடெல் ஹோசஸ்பிடாலிட்டி லிமிடெட் Azotels Hospitality Limited மற்றும் Hunas Holdings PLC அதனுடன் இணைந்த கூட்டமைப்பு இணைந்து இதனை சொகுசு ஹோட்டலாக மாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்