பெண் மருத்துவரிடம் அத்துமீற முயன்ற வித்தியா கொலையாளி!
இலங்கையில் வடக்கோ அல்லது தெற்கோ சில சமூகவிரோத குற்றவாளிகள் அல்லது பாதாள உலக போதை குற்றவாளிகளுக்கு அவர்களுக்குரிய சிறைத்தண்டனைகள் கூட திருந்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதில்லை என்பதற்கும் கசப்பான ஆதாரங்கள் உள்ளன.
அந்தவகையில் 2015 இல் யாழ்ப்பாணத்தை உலுக்கிய பாடசாலை மாணவியான புங்குடுதீவு வித்யா கடத்தப்பட்டு தவறான முறைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரும் மரணதண்டனை தீர்ப்புபெற்றவருமான கோகிலன் கண்ணா, கண்டி பல்லேகல சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அங்கும் அவர் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்த முனைந்த சம்பவம் அதிர்ச்சிகரமாக வெளிவந்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் பல நாடுகளில் மோசமான பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மைநீக்கம் (Castration) செய்யப்படுவது சரிதான் என்பதை ஆதாரப்படுத்துகிறது.
2015 இல் புங்குடுதீவில் 18 வயதான மாணவியான சிவலோகநாதன் வித்யாவைக் கடத்திச்சென்று மிக மோசமான முறையில் தவறான முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்த இந்த வக்கிரக்காரர்களில் ஏழு பேருக்கு யாழில் நடந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனை காலத்திலும் இவ்வாறான திருந்தாத ஜென்மங்கள் குறித்த செய்திகள் அதிர்ச்சிகரமானவை.
அதுவும் சிறை மருத்துவமனையில் தனக்கு சிகிச்சையளித்த பெண்மருத்துவர் ஒருவரையே அவர் தவறான முறைக்கு உட்படுத்த முயன்றபோது அதிகாரிகளால் அவர் காப்பாற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளமை அதிர்ச்சிகரமானது.
உள்ளூரில் இவ்வாறான அதிர்ச்சிகள் வர உலகஅரங்கில் நாளை செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி என அமெரிக்க ட்ரம்ப் ஈரானுக்கு விதித்த காலக்கெடும் ஈரானுக்கு உள்ளே நடந்த அமெரிக்க கொமாண்டோக்களின் ஒரு பரபரப்பான மீட்பு நடவடிக்கையும் திகில் மற்றும் அச்சம் பரபரப்பை தோற்றுவித்துள்ள நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகின்றது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |