தமிழ் மக்கள் பொதுச்சபை குறித்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Sri Lankan Tamils P Ariyanethran sl presidential election
By Sathangani Sep 29, 2024 10:27 AM GMT
Report

தமிழ்த் தேசிய அரசியலில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு அளித்துள்ள வாக்கு தமிழ்த் தேசிய அரசியலில் தன்னார்வ எழுச்சியின் சாட்சியம் ஆகிறது. இவ்வெற்றியின் உரிமை கோரல் தமிழ் மக்களுக்கு மாத்திரமே உண்டு என அனைத்துலக தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தமிழ் மக்களின் தன்னார்வ எழுச்சிக்கான வாய்ப்பை அடையாளங்காட்டிய வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை, இவ் எழுச்சியை நிறுவனமயப்படுத்தி பாதுகாக்க வேண்டிய பாரிய வரலாற்றுப் பொறுப்பு பெற்றுள்ளார்களென அந்த ஒன்றியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அனைத்துலக தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இன்று (29) வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொதுத் தேர்தலுக்கான மொத்த செலவு பணத்தையும் விடுவித்த ஜனாதிபதி

பொதுத் தேர்தலுக்கான மொத்த செலவு பணத்தையும் விடுவித்த ஜனாதிபதி

தமிழ்ப் பொதுவேட்பாளர்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள், தேர்தலுக்கு முன்னரான சூழலில் போலித் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட சதி கோட்பாடுகளை தகர்த்துள்ளது. ‘நமக்கு நாம்’ என்ற வரியில், தமிழ் மக்களின் தன்னார்வ எழுச்சி, சுயநிர்ணய உரிமைசார் தீராத் தாகத்தை வெளிப்படுத்தியிருந்தது.

தமிழ் மக்கள் பொதுச்சபை குறித்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Voted For Tamil General Candidate In The Election

தமிழ்ப் பொதுவேட்பாளர் கடுமையான நெருக்கடிக்குள், குறுகிய காலத்துக்குள் மக்களிடையே எழுச்சியை உருவாக்கி உள்ளதாயின், தேசியம் சார்ந்த விதை ஆழமாக பதிந்துள்ளமையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்ப் பொதுவேட்பாளர் போலித்தேசியவாதிகளையும் தெளிவாக அடையாளப்படுத்தி உள்ளது. தமிழ் பொது வேட்பாளர் மீதான தமிழ்த் தேசியத்தின் திரட்சி தமது வாக்கு வங்கிகளை பலவீனப்படுத்துமென தமிழரசுக் கட்சியின் சுமந்திரன்-சாணக்கியன் அணியினர் பொது வேட்பாளரை தோற்கடிப்போமென சூளுரைத்தனர்.

அவ்வாறே தாமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் புறக்கணிப்பு அரசியல் என்ற பிரசாரத்தை தமிழ்ப் பொதுவேட்பாளர் எதிர்ப்பாக மாத்திரமே கட்டமைத்தனர். இவ் இருதரப்பினதும் நேரடியான எதிர்ப்பு போலித் தேசியவாதத்தை அம்பலப்படுத்தியது.

பொதுத்தேர்தலில் போட்டியிட சங்கு சின்னம் வேண்டும் : தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்

பொதுத்தேர்தலில் போட்டியிட சங்கு சின்னம் வேண்டும் : தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு

இவர்களை விட ஆபத்தானவர்களாக தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டு, தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரசார செயற்பாடுகளை செய்யாது, தமது ஆதரவாளர்கள் ஊடாக தென்னிலங்கை வேட்பாளருக்கு பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளார்கள்.

தமிழ் மக்கள் பொதுச்சபை குறித்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Voted For Tamil General Candidate In The Election

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) ஆகிய இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக இதய சுத்தியுடன் செயற்பட்டிருக்கவில்லை என்பதை தேர்தல் காலத்தின் கள ஆய்வுகளோடு, தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றது.

மேலும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்காத போதிலும், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக கருத்துரைத்த தமிழரசுக்கட்சியின் தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறீதரன், தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவை இதய சுத்தியுடன் முழுவீச்சுடன் செயற்படுத்தி இருக்கவில்லை.

தமிழ் மக்கள் தமது நம்பிக்கையை ஆணையை சிவில் சமூக கூட்டினைவான தமிழ் மக்கள் பொதுச்சபையிடமே வழங்கி உள்ளார்கள். எனவே தமிழ் மக்கள் பொதுச்சபைக்கு வலுவான பொறுப்புடைமை வழங்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அழைப்பு

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அழைப்பு

இனப்படுகொலைக்கு பொறுப்பு 

இப்பின்னனியில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பிற்குள், போலித் தேசியவாதிகளை வேறுபடுத்தி அணுக வேண்டிய தேவைப்பாடு, சமவலு பங்குதாரராக உள்ள தமிழ் மக்கள் பொதுச்சபையிடம் காணப்படுவதை சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழ் மக்கள் பொதுச்சபை குறித்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Voted For Tamil General Candidate In The Election

தென்னிலங்கை அரசாங்கத்திடம் இனப்படுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். இச்சமுகம் தமக்குள் உள்ளக அரசியலில் பொறுப்புக் கூறலை பேணாமை முரணான அரசியல் வெளிப்பாடாகும். இதனை தமிழ் மக்கள் பொதுச்சபையும் மரபாக கடந்து செல்ல முடியாது.

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றம், ஏதோ ஒரு வகையில் தமிழர் தாயக பகுதிக்கும் பொருத்தமானதாகும். எனவே புதிய மாற்றங்களை உள்வாங்கும் புதிய அரசியல் இயக்கமாகவே தமிழ் மக்கள் பொதுச்சபையின் தேவை மக்கள் மத்தியில் உணரப்படுகின்றது.

இதனை பூர்த்தி செய்யும் வகையிலேயே தமிழ் மக்கள் பொதுச்சபையின் பணிகளும், செயற்பாடுகளும் கட்டமைக்கப்படுவதும் அவசியமாகும்“ என அனைத்துலக தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ரணில் தயார் : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு

எதிர்க்கட்சி பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ரணில் தயார் : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025