பென்டகன் பகுதிக்குள் நுழைந்த கோழி ரகசிய உளவாளியா? (படங்கள்)
அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் பென்டகனில் நுழைந்த கோழியை பாதுகாப்பு ஊழியர் பிடித்து காவலில் அடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் இராணுவ தலைமையகமாக விளங்குவது பென்டகன். இங்கு எளிதாக யாரும் சென்று விட முடியாது. கடுமையான பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் சோர்வான கோழி ஒன்று பென்டகனுக்குள் நுழைந்துள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த, பாதுகாப்பு ஊழியர்கள் அதை பிடித்து காவலில் அடைத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் உள்ளூர் விலங்குகள் ஆர்வல அமைப்பு செய்தி தொடர்பாளர் செல்சி ஜோன்ஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
பிடிக்கப்பட்ட கோழி திங்கட்கிழமை காலை அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் தலைமையகம் அருகில் சுற்றித்திரிந்துள்ளது. கோழி சரியாக எந்த இடத்தில் காணப்பட்டது என்பது குறித்து கூற முடியாது.
அதை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு செக்போஸ்ட் அருகே பிடிபட்டதாக மட்டுமே எங்களால் கூற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜிம்மி பாலன் தன்னுடைய ‘The Tonight Show’, வேடிக்கையாக நீங்கள் சாதாரண கோழியா? அல்லது ரகசிய உளவாளியா? எனக் குறிப்பிட்டார்.
பின்னர், சிறு கோழி பண்ணை வைத்திருக்கும் ஒருவரிடம் கோழி ஒப்படைக்கப்பட்டது.