மாற்றுத்திறனாளி சிறுமிகளை சித்திரவதை செய்த விடுதி காப்பாளர் கைது
Sri Lanka Police
Anuradhapura
Sri Lanka Police Investigation
By Sumithiran
அநுராதபுரம் நகரிலுள்ள விசேட பாடசாலையின் விடுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமிகளை சித்திரவதை செய்ததாக கூறப்படும் விடுதி காப்பாளர் இன்று (12) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அநுராதபுரம் காவல் உத்தியோகத்தர்கள் குழுவொன்று இந்த காப்பாளரை கைது செய்துள்ளது.
பெற்றோர்கள் கொடுத்த முறைப்பாடு
அநுராதபுரம்(anuradhapura) தலைமையக காவல்துறைபரிசோதகர் ஆர்.எம்.ஜெயவீர, பெற்றோர்கள் கொடுத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விடுதியில் வசிக்கும் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட செவித்திறன் குறைபாடுள்ள ஏழு சிறுவர்களை இந்த காப்பாளர் சித்திரவதை செய்ததாக தெரிவித்தார்.
சித்திரவதைக்கு உள்ளான சிறுமிகளை சட்ட வைத்தியரிடம் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி