எதிர்வரும் சில நாட்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை: இலங்கையில் நடைமுறைக்கு வரும் தடை
பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் தேவையற்ற பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதை முற்றாக தடை செய்ய இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பயணிகள் தமது பைகளை பொதிகள் வைக்கும் இடங்களில் வைக்காமல் அவற்றை தம்வசம் வைத்திருக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுன விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் சில நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாமென இந்திய உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையுடன் மீண்டும் எங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
எனவே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்றுமாறு பேருந்து ஊழியர்களுக்கு சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,