ஆபத்திலுள்ள 12,301 வீடுகள் : மக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை
Sri Lankan Peoples
Landslide In Sri Lanka
National Building Research Institute
By Sathangani
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் குறித்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள 12,301 வீடுகள் மக்கள் வசிப்பதற்குப் பொருத்தமானதல்ல என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த வீடுகளிலுள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளி
இதனிடையே, டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட தொடருந்து பாதைகளைச் சீரமைப்பதற்குத் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தொடருந்து அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொடருந்து சேவையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கு உரிய திட்டங்கள் இல்லாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |