வசந்த முதலிகேவின் கைதை நியாயப்படுத்தும் ரணில்..!
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் தடுத்துவைத்து விசாரணை செய்யப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தப்படுத்தியமையை அதிபர் ரணில் விக்ரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார்.
போராட்டங்களின்போது பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றனவா என்பது தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியே விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வசந்த முதலிகேயின் கைதுடன் அரசைத் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் விடுத்த எச்சரிக்கை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகேவைத் தடுத்து வைக்கும் உத்தரவில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திடக் கூடாது என்று மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பிலான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தென்னிலங்கை ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

