திருகோணமலை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
people
trincomale
water cut
By Shalini
திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (15) 12 மணித்தியால நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, கிண்ணியா, தம்பலகாமம், திருகோணமலை நகர், நிலாவெளி, ஆண்டாங்குளம், பாலையூற்று ,சீனக்குடா ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நாளை இடம்பெறாது.
திருகோணமலை – கண்டி பிரதான வீதி, முள்ளிப்பொத்தானை பகுதியில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவினால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி