தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு வேலைத்திட்டத்திலும் தமிழ் மக்களைப் புறக்கணிக்கவோ அல்லது கைவிடவோ மாட்டோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (15) விவாதத்தின் போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையசரன் உரைக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடமாகாணத்தில் போதைப்பொருள் பிரச்சினை
வடமாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய அம்மாகாண ஆளுநர் தலைமையில் விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாடு முழுவதிலும் செயலணிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எவ்வித அழைப்பும் இன்றி கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு சென்றோம். அங்கே இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 11 ஆயிரத்து 200 பேர் வரையிலானோர் உள்ளனர். அவர்களில் பலர் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
தமிழர்களை கைவிடமாட்டோம்
அதன்படி
அங்கு மூன்று நடமாடும் சேவைகளை
நடத்தியுள்ளோம். மேலும், யுத்தத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு
வழங்கவும், அதனை இரட்டிப்பாக்கவும்
நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்களையோ, உங்கள் சமூகத்தையோ
நாங்கள் புறக்கணிக்கவோ, கைவிடவோ
இல்லை எனவும் தெரிவித்தார்.