திருமலையில் ஆயுதங்கள் மீட்பு : செயலிழக்கச் செய்ய நடவடிக்கை
திருகோணமலை - ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவிலுள்ள பகுதியில் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து இன்று (08) காலை குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஈச்சிலம்பற்று காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள்
இதன்போது 694 துப்பாக்கி ரவைகள், 61 ரக மோட்டார் குண்டுகள் 04, மோட்டார் பியுஸ் 02, மோட்டார் குண்டு மின்னேற்றி 06, ஆர்.பி.ஜி.குண்டு 01 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சேருநுவர காவல்துறை பிரிவின் பிரதி காவல்துறை மற்றும் ஈச்சிலம்பற்று காவல் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் குறித்த சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்களை விசேட அதிரடிப்படையின் உதவியுன் செயலிழக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |