கூரைமேல் ஏறி வெலிக்கடைக் கைதிகள் போராட்டம்! இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது
Struggle
SriLanka
Welikada Prison
By Chanakyan
தண்டனையைக் குறைத்து தமக்குச் சாதகமான தீர்வை வழங்க வேண்டும் என கோரி வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் போராட்டம் செய்து வருகின்றனர்.
நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தை இரண்டாவது நாளான இன்றும் அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை சுமார் 10 கைதிகள் சிறைச்சாலையின் கூரைமீது ஏறி இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் கைதிகளின் கோரிக்கைக்கு தம்மால் சாதகமான தீர்வை வழங்க இயலாது என சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிபட தெரிவித்துள்ளது.