துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்பு : வீட்டை விட்டு மாயமான முன்னாள் அமைச்சர்

Dr Rajitha Senaratne Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Jul 12, 2025 12:50 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது தொலைபேசியைத் துண்டித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. 

கிரிந்த துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு சட்ட நடைமுறைகளை புறக்கணித்து வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 2.62 பில்லியன் ரூபாவிற்கு மேல் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தில் மக்களை கொன்றது விடுதலைப் புலிகளாம்: இராணுவத்தை ஆதரிக்கும் மகிந்தவின் சகா

யுத்தத்தில் மக்களை கொன்றது விடுதலைப் புலிகளாம்: இராணுவத்தை ஆதரிக்கும் மகிந்தவின் சகா

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

சம்பந்தப்பட்ட விசாரணைக்காக வாக்குமூலம் அளிக்குமாறு பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும், அவர் பல்வேறு பொய்யான காரணங்களை முன்வைத்து அதைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்பு : வீட்டை விட்டு மாயமான முன்னாள் அமைச்சர் | Went Away After Leaving Rajitha S Door

இந்நிலையில் விசாரணைகளைத் தவிர்க்கும் சந்தேக நபரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.

எனினும், அத்தகைய உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி ராஜித சேனாரத்ன நோய்வாய்ப்பட்டுள்ளதாகக் கூறும் மருத்துவ அறிக்கை சட்டத்தரணி ஒருவர் மூலம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்ற நிகழ்த்தப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து! நிபுணரின் அதிர்ச்சி கருத்து

வேண்டுமென்ற நிகழ்த்தப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து! நிபுணரின் அதிர்ச்சி கருத்து

முன்னாள் அமைச்சர் 

எனினும் அதற்கான சட்டப்பூர்வ அடிப்படை எதுவும் இல்லை என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்பு : வீட்டை விட்டு மாயமான முன்னாள் அமைச்சர் | Went Away After Leaving Rajitha S Door

இதன்படி சந்தேக நபரால் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் ஏதேனும் உள்ளதா என்று நீதவான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், அந்த ஆவணங்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் கோப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபருக்கு பிடியாணை பிறப்பிக்க, தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவது அவசியம் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளிடம் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அத்தகைய அறிக்கைகளை ஆராயாமல் உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் B-52H விமானங்கள்! வடகொரியாவுக்கு சவால் விடும் அமெரிக்க கூட்டணி

கொரிய தீபகற்பத்தில் B-52H விமானங்கள்! வடகொரியாவுக்கு சவால் விடும் அமெரிக்க கூட்டணி

சந்தேக நபருக்கு பிடியாணை

இருப்பினும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்பு : வீட்டை விட்டு மாயமான முன்னாள் அமைச்சர் | Went Away After Leaving Rajitha S Door

அத்தோடு, அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த சந்தேக நபரைக் கைது செய்ய முடியும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

இந்த கோரிக்கை எதிர்காலத்தில் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி 1994 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றத்தின் கீழ் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கல்வி சீர்திருத்தம்: எம்.பிக்களுக்கு பாடம் எடுத்த பிரதமர்

புதிய கல்வி சீர்திருத்தம்: எம்.பிக்களுக்கு பாடம் எடுத்த பிரதமர்

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024