மூன்றாம் உலகப்போரை நோக்கி நகரும் உலகம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி
அண்மைக்காலமாக சர்வதேச நாடுகளுக்கு இடையே எழுந்த மோதல்கள், உலகத்தை மூன்றாம் உலகப் போரின் பரிதாப வாயிலில் நின்று கொண்டிருக்கச் செய்துள்ளன.
அமெரிக்கா (United States), ரஷ்யா (Russia), ஈரான் (Iran) மற்றும் இஸ்ரேல் (Israel) போன்ற வலிமை மிக்க நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தும் நிலையில், பல புதிய சக்திகளும் நேரடியாகக் களமிறங்கியுள்ளன.
வான்வழி தாக்குதல்களும், நிலவழி படையெடுப்புகளும், பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இயங்கும் ஆயுதங்களின் தாக்குதல்களும் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
போரின் தாக்கம் சர்வதேச வர்த்தகத்தையும், எண்ணெய் விநியோகத்தையும் கடுமையாக பாதித்து, பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
இந்நிலைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் என்பது ஒரு யூகமல்ல, ஏற்படக்கூடிய நிஜ அச்சமாக மாறியுள்ளது.
இது தொடர்பிலும், ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர், அமெரிக்காவின் திடீர் தாக்குதல், மூன்றாம் உலக போர் உருவாவதற்கான அடித்தளம் மற்றும் உலக வர்த்தகம் தொடர்பிலான பிண்ணனி மற்றும் அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கீழ்காணும் தொகுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
