நேபாள வெள்ளப்பெருக்கிற்கு காரணமான பனிச்சரிவு: எதேட்சையாக பிடிபட்ட காணொளி
நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை சரிவு சம்பவம், தற்செயலாக ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது.
சீன புகைப்படக் கலைஞர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட இந்தக் காட்சிகளில், கடல் மட்டத்திலிருந்து 7,200 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள லாங்டாங் லிருங் மலைச் சிகரத்திற்கு அருகில், பாரிய பாறைகள் மற்றும் பனிப்பாறைத் துண்டுகள் மலையின் சரிவிலிருந்து இடிந்து விழும் காட்சி அநடத காணொளியில் பதிவாகியுள்ளது.
மேலும் பனிப்பாறையும் பாறைகளும் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பெரும் தூசிப் படலம் மலைப் பகுதி முழுவதும் பரவுவதையும் அந்த ட்ரோன் காட்சிகளில் காண முடிகிறது.
நேபாள வெள்ளப்பெருக்கு
அதனைத் தொடர்ந்து பனி, பாறைகள், சேறு மற்றும் பெருமளவான குப்பைகள் சுமார் 1,200 மீற்றர் கீழே அமைந்துள்ள பள்ளத்தாக்கை நோக்கி வேகமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தான் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்தப் பேரழிவில் நேபாளத்தில் 903 பேரும் திபெத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், நேபாளத்தில் மாத்திரம் மேலும் 4,500க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேபாளத்தை உலுக்கிய பாரிய இயற்கைப் பேரழிவு நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, நாடு “கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இதயத்தை உலுக்கும் இயற்கைப் பேரழிவை” எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காணொளியை காண இங்கே க்ளிக் செய்யவும்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |