சிறைக்குள் பிள்ளையானின் கடிதத்தில் ஒப்பம் இட்டது யார்! குழப்பத்தில் புலனாய்வாளர்கள்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிள்ளையான் (Pillayan) கையெழுத்திட்ட கடிதம் ஒன்று மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்பாக்கியநாதனிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.
இப்போது அந்த கடிதம் எழுதப்பட்ட விதமும் அதில் கையொப்பமிட்டது உண்மையில் பிள்ளையான் தானா என்பது தான் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினருடைய மேலதிக விசாரணையாக இருக்கின்றது.
ஒருவேளை அந்தக் கடிதம் பிள்ளையானின் கோரிக்கைக்கு அமைய கட்சியினுடைய உறுப்பினர்கள் அல்லது செயலாளர்கள் அனுப்பியிருந்தால் தவறில்லை.
பிள்ளையானின் ஒப்பம் அதில் பயன்படுத்தப்பட்டிருப்பது தான் இப்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இனி என்ன நடக்கப்போகின்றது, எவ்வாறான சூழ்நிலைக்குள் விசாரணைகள் நகர்த்தப்படப் போகின்றது, இதற்குப் பின்னர் என்ன நிலைமை ஏற்படப் போகின்றது, விசாரணைகள் இதனுடன் நிறுத்தப்படுமா என்ற சூழ்நிலை தான் தற்போது நிலவுகின்றது.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க .....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
