வாழைச்சேனையை உலுக்கிய காட்டு யானை தாக்குதல்! ஒருவர் பலி மூவர் படுகாயம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை(13.02.2026) அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த இந்த யானை, வீதிகளில் சென்றவர்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
யானை தாக்குதல்
இதில் இடியப்பம் விற்றுக்கொண்டு வந்த 68 வயது மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரப் பகுதிக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
காட்டுயானைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமங்களுக்குள் மாத்திரமின்றி நகர் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி தாக்கி வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |