ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுமா? இறுதி முடிவு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
curfew
srilanka
gotabaya
lifted
By Sumithiran
தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நீக்கப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு நாளை (17) எடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளை காலை நடைபெறும் கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
நாட்டை மீண்டும் திறப்பது குறித்து சுகாதாரத் துறைத் தலைவர்கள் தயாரித்த தொடர் பரிந்துரைகளும் இந்த கூட்டத்தில் அளிக்கப்படும்.
இதேவேளை, கொவிட் 19 ஒழிப்பு செயலணியின் தலைவரும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடுமையான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் நாடு திறக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.