நாட்டிலுள்ள கொலைக் கலாசாரத்தை துடைத்தெறியுங்கள் : சஜித் பகிரங்க கோரிக்கை

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sajith Premadasa Ministry of Defense Sri Lanka
By Sathangani Mar 14, 2025 10:09 AM GMT
Report

நாடு முழுவதும் பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கொலை அலையை தடுக்க அரசங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இடம்பெற்று வரும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இன்று (14) நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தூண்களில் ஒன்றான காவல்துறையும், நீதித்துறையும் இன்று ஆபத்தான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன.

ஊழியர்களுக்கு EPF வழங்காத அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்...! அம்பலமான மோசடி

ஊழியர்களுக்கு EPF வழங்காத அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்...! அம்பலமான மோசடி

நீதிமன்ற அறையில் கொலை

சந்தேக நபர்களை நீதிமன்ற அறையில் கொலை செய்கின்றனர். நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் மீது காணப்படும் அச்சம், மரியாதை முற்றாக இல்லாது போயுள்ளன.

நாட்டிலுள்ள கொலைக் கலாசாரத்தை துடைத்தெறியுங்கள் : சஜித் பகிரங்க கோரிக்கை | Wipe Out The Culture Of Murder From The Sri Lanka

நீதிமன்ற அறையில் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது நீதிபதிகளுக்கு ஏற்படும் அதிர்ச்சியை சொல்லி முடிக்க முடியாது. இனியும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்பதற்கு அரசாங்கம் என்ன உத்தரவாதத்தை நாட்டுக்கும் மக்களுக்கும் நீதிபதிகளுக்கும் வழங்க முடியும்

இத்தருணத்திலும் கூட நீதிமன்றத்தில் கொலையை திட்டமிட்ட பெண்ணும், முன்னாள் காவல்துறை மா அதிபரும் நீதிமன்ற பிடியாணையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளனர்.

காவல்துறையினரால் கூட முன்னாள் காவல்துறைமா அதிபரைக் கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் பொது மக்கள் பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது.

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

முன்னாள் அத்தியட்சகர் கொலை

நேற்று (13) பூசா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். கம்பஹா வெலிவேரிய பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

நாட்டிலுள்ள கொலைக் கலாசாரத்தை துடைத்தெறியுங்கள் : சஜித் பகிரங்க கோரிக்கை | Wipe Out The Culture Of Murder From The Sri Lanka

அகுனுகொலபலஸ்ஸ பகுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மீகஹகிவுல, தல்தென, மூதூர் போன்ற பிரதேசங்களிலும் கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய பின்னனியில், பொதுமக்களின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது. இதை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.

வீதிகளில் கொலை, வன்முறை, மற்றும் பயங்கரவாதம் என முழு சமூகத்திலும் பயங்கரம் ஆட்கொண்டுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த, யாரிடமாவது டியூஷன் எடுத்து இந்த கொலை அலையை தடுக்க அரசங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

எல்ல - வெல்லவாய வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடை : வெளியான அறிவிப்பு

எல்ல - வெல்லவாய வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடை : வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026