கொழும்பில் பிரபல வீட்டுத் தொகுதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண் கைது
கொழும்பில் உள்ள ஹவ்லொக் சிட்டி வீட்டுத் தொகுதிக்குள் ரி-56 துப்பாக்கியுடன் ஒரு பெண் இன்று (மே 20) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பெண் தனது காரில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியை எடுத்துச் செல்வதைக் கண்ட வீட்டு வளாகத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், அது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்
பின்னர் வெள்ளவத்தை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியையும் பெண்ணையும் தமது காவலில் எடுத்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணை
இந்த துப்பாக்கி உண்மையானதா இல்லையா என்பது குறித்தும், அந்தப் பெண் துப்பாக்கியை எவ்வாறு பெற்றார் என்பது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
