வெளிநாடொன்றில் பழங்கால நீராவி தொடருந்து முன் செல்பி எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
மெக்சிகோவில் (Mexico) பழங்கால நீராவி தொடருந்து முன் செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவமானது மெக்சிகோவின் ஹிடால்கோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை (CPKC) உருவாக்கிய நட்புரீதியான இணைப்பைக் கொண்டாடும் விதமாக 1930ஆம் ஆண்டில் 'பேரரசி' எனப்படும் ஒரு நீராவி இன்ஜின் கொண்ட தொடருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
செல்பி புகைப்படம்
இந்த பழங்கால தொடருந்து கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடைகிறது.

இந்நிலையில், பேரரசி தொடருந்து மெக்சிகோவில் நுழையும்போது ஹிடால்கோ பகுதி அருகே பலரும் புகைப்படம் எடுப்பதற்காக கூடியுள்ளனர்.
உயிரிழப்பு
இதன்போது, தனது மகனுடன் வருகைதந்த இளம்பெண் ஒருவர் பேரரசி தொடருந்து முன்பு செல்பி புகைப்படம் எடுக்க முயன்றபோது தொடருந்தின் எஞ்சின் இளம்பெண்ணின் தலையில் மோதியுள்ளது.
MEXICO - In Hidalgo, a famous train that comes from Canada and travels all the way to Mexico City, attracting locals, struck a woman who was trying to take a selfie as the train approached. She passed at the scene. Article in comments. pic.twitter.com/32XdsCehEB
— The Many Faces of Death (@ManyFaces_Death) June 5, 2024
இதனை தொடர்ந்து, பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |