ஏணியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
ஏணியிலிருந்து தவறிவிழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (26.04.2026) லக்கலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
காயமடைந்த குறித்த பெண் லக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் ஏணியொன்றின் உதவியுடன் வீட்டின் கூரை மீது ஏற முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக அதிலிருந்து கீழே விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் லக்கலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி