தீர்வு வழங்கக்கூடாது என்பதற்காகவே DCC கூட்டம் இழுத்தடிப்பு: தவிசாளர் யுகதீஸ்
வடமராட்சி கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்கூடாது என்பதற்காகவே DCC கூட்டம் நடாத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.
மீன்பிடி நடவடிக்கைகள்
இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு இதுவரை இல்லாததால் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் DCC கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டும்.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் தலை தூக்கி இருக்கின்றன.
கடல் வளம் விரைவாக அழிந்து கொண்டிருக்கின்றது. யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் பிரச்சினை
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தான் இவ்வாறு மக்கள் தமது பிரச்சினைகளை கதைத்து வந்தார்கள்.
அது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு வரை பேசப்பட்டது.

ஆனால் இந்த வருடம் DCC கூட்டம் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இதனை வைத்து பார்க்கும் போது இவ்வாறு DCC கூட்டத்தை நடத்தினால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதற்காகவே DCC கூட்டம் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்