மாத்தளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண்
மாத்தளையில் (Matale) வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13) அதிகாலை இடம்பெற்றிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
குடும்பப் பெண்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அவர் உறங்கிய நிலையில் நேற்று (13) அதிகாலையில் நீண்ட நேரமாகியும் எழும்பாமல் இருந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதனையடுத்து பெண்ணின் கணவர் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள நிலையில் வைத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தம்புள்ளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
