சிறைக்குள் இருக்கும் கணவனுக்கு போதைப்பொருள் கடத்திய மனைவி கைது!
                                    
                    Kalutara
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Prisons in Sri Lanka
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட பெண் ஒருவர் களுத்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் களுத்துறை சிறைச்சாலைக்கு 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது முலட்டியான, பயாகல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
எலும்புகளில் போதைப்பொருள்
குறித்த பெண் சிறையில் இருக்கும் தனது கணவரை பார்க்கச் செல்லும்போதே போதைப்பொருளை எடுத்துக்சென்றுள்ளார்.
இந்நிலையில் தனது கணவருக்கு உணவு வழங்கும் போர்வையில் அவர் கொண்டு வந்த கோழிப் பொதியின் எலும்புகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பெண் தனது 06 வயது மகளுடன் சிறைச்சாலைக்கு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்