யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிச்கை!
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி , கல்வியங்காடு, கோப்பாய் , கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து குறித்த பெண் மோசடியில் ஈடுபட்டு வருதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது, சந்தேகநபரான பெண் தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பண மோசடி
கடந்த செவ்வாய்க்கிழமை வீடொன்றுக்கு வேகோ மோட்டார் சைக்கிளில் சென்ற பெண், தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடியாக பெற்று சென்றுள்ளார்.
பணத்தினை கொடுத்த வெளிநாட்டவர் , அது தொடர்பில் தனது உறவினர்களுக்கு தெரிவித்த போதே, அந்த பெண் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வேறு நபர்களிடமும் பணத்தினை வாங்கியுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
முறைப்பாடு
இந்த நிலையில், இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தால், தான் விசாரணை நடவடிக்கைகளால் நாட்டுக்கு திரும்ப முடியாது கால தாமதம் ஏற்படும் என கருதி முறைப்பாடு செய்யவில்லை எனவும் காவல் நிலையத்தில் மோசடி பெண் குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதன்படி, பெண்ணின் மோட்டார் சைக்கிள் இலக்கம் , பெண் தொடர்பான அடையாளங்களை காவல்துறையினருக்கு தெரிவித்தமையின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை, வெளிநாடுகளில் இருந்து வருவோரை இலக்கு வைத்து , நன்கொடைகள் , மருத்துவ உதவிகள் என கோரி வருவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 21 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்