இணையம் மூலம் பணமோசடி : பலிக்கடாவாகும் பெண்கள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Online business
By Jaso
இந்த வருடம் இணையம் மூலம் நடத்தப்பட்ட பண மோசடிகள் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணனி குற்றப்பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் திருமதி தர்ஷிகா குமாரி தெரிவித்தார்.
தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத பல்வேறு நபர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்கி பணம் மற்றும் உடமைகளை இழந்த பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருமளவில் பலிக்கடாவாகும் பெண்கள்
இணையத்தில் இத்தகைய மோசடிகளுக்கு பெருமளவில் பெண்கள் பலியாகி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி தர்ஷிகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |